search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்"

    சிவகங்கையில் 3 பேர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து கரூரில் புதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    கரூர்:

    சிவகங்கை மாவட்டம் திருப்பாசேத்தி கச்ச நேத்தம் கிராமத்தில் ஒரு சமூகத்தை சேர்ந்த 3 பேர் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர். இதனை கண்டித்து புதிய தமிழகம் கட்சியின் கரூர் மாவட்டம் சார்பில் கரூர் ஆர்.எம்.எஸ். அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் பி. அசோகன் தலைமை தாங்கினார். 

    மாவட்ட துணை செய லாளர் தினேஷ்குமார், நகர செயலாளர் பூபதி, ராஜே ந்திரன், ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன் மற்றும் திரளானோர் பங்கேற்றனர். இதில் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. 

    மேலும் கொலையாளிகளை உடனே கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
    ×